You are here

Classes

     ஜோதிடம் ஆனது பல யுகங்களையும் கடந்து வந்து பல சாதனைகளை புரிந்து வருகின்றன. ஆனால் இவை அனைவரிடமும் முழுமையாக சென்றடையவில்லை, ஒரு சில முறைகள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆவற்றில் ஸ்ரீ ஆதி குரு ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆனது பல வருடங்களாக சிறந்த முறையில் தமிழகம் எங்கும் பயிற்று வித்து வருகிறது.

*ஒவ்வொரு மனிதனும் ஏன் ஜோதிடம் பயில வேண்டும்?*

  1. ஜோதிடம் ஓர் சிறப்புப் பார்வை*

  •      ஜோதிடம் வேதத்தில் ஓர் அங்கம். இது ஏதோ சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றில் நடந்த, நடக்கும், நடக்க போகின்ற வாழ்க்கை பலன்களை மட்டுமே சொல்லகூடிய கலை இல்லை.அதையும் தண்டி பல தகவல் உள்ளன அவைகளை காண்போம்,

1-5-9 தர்ம சாஸ்திரம்:-

  • கர்மத்தை எடுத்து காட்டவும் முறைபடுத்தவும் உதவுகிறது.தர்மங்களையும் அறங்களையும் சொல்லித்தருகின்றது. சிருஷ்டியை பற்றி சொல்கின்றது. வழிபாட்டு விசயங்கள் பற்றி அறியச் செய்கின்றது. அருளிலார்க்கு எவ்வுலகமும் இல்லை. தன் முன்னோர்களை பற்றி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரு மனிதன் அறிய வேண்டும் என்றும் தனக்கு பிறகு தன்னுடைய சந்ததிகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைக்கின்றது

2-6-10 அர்த்த சாஸ்திரம்:-
=======================

  • பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. ஓரு மனிதன் எப்படி பொருளீட்ட வேண்டும். அவனுக்கு என்ன மாதிரி எதிர்ப்புகள் வரும்.தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கேற்ப அவன் சமூகத்தில் அடையும் புகழ் முதலான விசயங்களை பற்றி கூறுகின்றது

3-7-11 காம சாஸ்திரம்:-
=====================

  • காமம் ஒரு மனிதன் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வாழ்வில் வெற்றி பெற தேவையான ரகசியங்கள் பற்றி கூறுகின்றது

4-8-12 மோட்ச சாஸ்திரம்:-
=======================

  • மோட்சமே மனிதனின் அகவாழ்விற்கான திறவுகோல்.ஒவ்வொரு மனிதனும் எப்படி வீடு பேறு அடைவது பற்றி எடுத்துரைக்கிறது. தனி மனிதன் செய்யும் தவறுகளால் சமூகம் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறது, சமூகத்தால் தனி மனிதன் அடையும் பாதிப்புகளையும் பற்றி எடுத்து உரைக்கின்றது. அவனது ஆயுளுக்குள் அவன் செய்ய வேண்டியவற்றை உரைக்கின்றது.

ஜோதிடம் ஓர் மருத்துவ இயல்:-

  • மனிதர்களின் உடற்கூறு தத்துவத்தை அழகாக விளக்குகின்றது. எனவே நன்கு தேர்ச்சி அடைந்த ஜோதிடன் மருத்துவனுக்கு ஒப்பாவான்.

ஜோதிடம் ஓர் மனோதத்துவ இயல்:-

  • மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பலம் பலவீனம் என்ன, என்று விளக்கமாக கூறுகின்றது.

ஜோதிடம் ஓர் வானவியல்:-

  • வானில் கிழக்கே எந்த பாகம் உதயமாகிறது, மேற்கில் எந்த பாகம் மறைகிறது, உச்சியில் தெரியும் பாகம் என்ன? கண்ணுக்கு தெரிமாமல் மறைந்துள்ள பாகம் என்ன, எப்போது மழை பொழியும், பருவநிலை மாற்றம் என பல தகவல்களை தருகின்றது.

ஜோதிடம் ஓர் சமூக அறிவியல்:

  • ஒரு அரசு எப்படி ஆட்சி நடக்க வேண்டும், எப்போது போர் தொடுக்க வேண்டும், புவியியல் சார்ந்த விசயங்களை கூறுகின்றது.முன்னோர்களின் வரலாற்றை கூறுகின்றது. வரலாறு, குடிமையியல், பூகோளம் பற்றி கூறுகின்றது.
  • ஜோதிடம் ஓர் ஆன்மீக இயல்.

  • ஜோதிடம் ஓர் இசைஇயல்.

  • ஜோதிடம் ஓர் மந்திரவியல்.

  • ஜோதிடமே வேதம். வேதமே ஜோதிடம்.

  • ஜோதிடம் அறிந்தவன் முக்காலம் உணர்ந்த முனிவன் ஆகின்றான். சகலமும் தெரிந்த ஞானியாகின்றான்.

  • ஒரு மனிதன், அரசு, சமுதாயம், பூகோளம் எப்படி இயங்க வேண்டும், எப்போது இயங்க வேண்டும் என்று கூறுகின்றது.

  • ஜோதிடம் கற்றுக்கொள்வதால் பெருமிதம் கொள்ளுங்கள்.

  • சரியான முறையில் ஒரு ஜோதிடர் கணிப்பது சாத்தியமான ஒன்று

  • ஜோதிடம் விஞ்சானம் மட்டும் அன்று இது மெய்ஞானமும் ஆகும்

  • ஜோதிடம் கற்க பூர்வ கர்மா துணை நிற்க வேண்டும் , அதனால் தான் 5 பாவகம் கலைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன

  • ஒரு ஜோதிடர் ஆத்மார்தமாக சேவை செய்யும்போது எதார்தமாக கூறும் வார்த்தைகள் கூட பலிதமாம்

 

பயிற்சிக்கானப் பாடத்திட்டம் முதல் ஆறு மாதம்:-

1. ஜோதிடம் என்றால் என்ன?சிறு குறிப்புகள்

2. ராசிகள்

3. ராசிகளின் தன்மைகள்

4. ராசிகளின் காரகத்துவங்கள்

5. கிரகங்கள்

6. கிரகங்களின் தன்மைகள்.

7. கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, பகை பெறும் ராசிகள்

8. கிரகங்களின் காரகத்துவங்கள்

9. கிரகங்களுக்கிடையான உறவு நிலைகள்

10. கிரகங்களின் தசா ஆண்டுகளும், காலபுருஷ தத்துவ கிரகங்களின் தசா வரிசையும்

11. நட்சத்திரங்கள்

12. நட்சத்திரங்களின் தன்மைகள்

13. ராசிகளில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள்

14. நட்சத்திரங்களின் அதிபதிகள்

15. வாரம்

16. திதி

17. யோகம்,

18. கரணம்

19. உத்திராயணம், தட்சிணாயணம் என்றால் என்ன?

20. ருதுக்கள் பற்றிய சிறு குறிப்புகள்

21. நேத்திரம், ஜீவன் பற்றிய சிறு குறிப்புகள்

22. ஜாதகக் கட்டத்தை மட்டுமே பார்த்து ஜாதகர், காலை / பகல் / மாலை / இரவு எனவும், அமாவாசை/பெளர்ணமி / வளர்பிறை / தேய்பிறை ஆகியவற்றில் எந்த காலத்தில் ஜாதகர் பிறந்தவர் என அறிவது எப்படி?

23. ஜோதிட சொல் விளக்கங்கள்

24. பஞ்ச மஹா புருஷ யோகங்கள் பற்றிய விளக்கங்கங்கள்

25. வக்ரம், அஸ்தமனம், கிரக யுத்தம் பற்றிய சிறு விளக்கங்கள்.

26. ஜாதகத்தில் யோகி, அவயோகி காணும் முறைகள்

27. ஜாதகத்தில் சில முக்கிய சுபயோகங்களும், அசுப யோகங்களும்

28. ஜென்ம ராசியைக் கொண்டு ஏழரைச் சனிக் காலம், அஷ்டமச் சனிக் காலம், அர்த்தாஷ்டமச் சனிக் காலம், கண்டகச் சனிக் காலம் அறிவது எப்படி?

29. குரு பலம் என்றால் என்ன? அதனை அறியும் விதமும்

30. தாரா பலம் , சந்திரபலம் என்றால் என்ன? அதனை அறியும் விதமும்

31. ஹோரை என்றால் என்ன? ஹோரையின் பயன்பாடுகள்

32.சந்திராஷ்டமம் என்றால் என்ன? ராசி மற்றும் நட்சத்திரப்படி அறியும் விதம்

33. ஜென்ம லக்னம், ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன? அதைப் பற்றிய சிறு குறிப்புகள்

34. இந்து லக்னமும், அதை கணிக்கும் விதமும்

35. கேந்திரம், திரிகோணம், பணபர ஸ்தானம், ஆபோக்லீய ஸ்தானம், உப ஜெய ஸ்தானம், மறைவு ஸ்தானம்,பற்றிய சிறு குறிப்புகள்.

36. செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷங்களை அறிவது எப்படி?

37. பாதசாரம் என்றால் என்ன? அதைப் பற்றிய சிறு குறிப்புகள்

38. பாவத் பாவம் பற்றிய சிறு குறிப்பு

39. ஒரு பாவத்தை ஆய்வு செய்வது எப்படி?

40. பிரசண்ண முறைகள்,

  • தாம்பூலபிரசன்னம்
  • சோழி பிரசன்னம்
  • ஜாமகோல் பிரசன்னம்
  • அஸ்டமங்கல பிரசன்னம்
  • கே.பி ஜோதிடம்
  • ஆரும் முறைகள் (எண்பிரசன்னஆரும், ஹோரை ஆரும், புஷ்ப ஆரும் மற்றும் கடிகார ஆரும்)

41. பல ஜோதிட தகவல்கள் 

 

உதயாதி நாழிகை கணிக்கும் முறை(YOUTUBE LINK)

லக்னம் என்றால் என்ன? எவ்வாறு கணிப்பது(YOUTUBE LINK)